ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீன பெருநாள்  முதல் நாளில் போக்குவரத்து மெதுவாக நகருகிறது

கோலாலம்பூர், பிப்ரவரி 10 – சீனப் புத்தாண்டின் முதல் நாளான இன்று காலை 9 மணி நிலவரப்படி, பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் நெடுஞ்சாலை நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஜாலான் டூத்தா டோல் பிளாசா, சுங்கை பீசி டோல் பிளாசா (தெற்கே) மற்றும் கோம்பாக் டோல் பிளாசா (கிழக்கு நோக்கி) ஆகியவற்றிலிருந்து கிடைத்த தகவல் படி  வடக்கு நோக்கி கடும் போக்குவரத்து பதிவாகியுள்ளது, ஆனால் அது சீராகவும் கட்டுப்பாட்டில் இருந்தது.

போக்குவரத்து மெதுவாக வடக்கு நோக்கி ரவாங்கிலிருந்து சுங்கை புவாயா, சிலிம் ரிவர் சுங்காய், பேராக் மற்றும் தெற்கு நோக்கி நிலையிலிருந்து பண்டார்என்ஸ்டேல் வரை சிரம்பான் நோக்கிச் செல்லும் பாதையில் பயணம் மெதுவாக உள்ளது.

“போக்குவரத்து ஸ்கூடாயிலிருந்து செனாய் மற்றும் கூலாயிலிருந்து சிம்பாங் ரெங்கம் வரை மெதுவாக நகர்கிறது. ஸ்மார்ட் லேன் இயக்கப்பட்டது. KL-காரக் எக்ஸ்பிரஸ்வே (KLK) மற்றும் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை 1 (LPT1) மற்றும் LPT2 ஆகியவற்றில் இதுவரை போக்குவரத்து சீராக உள்ளது.

“பெந்தோங் சுங்கச்சாவடியில் போக்குவரத்து சீராக இருந்தது, மேலும் வாகனங்கள் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை” என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
PLUS தனது PLUS Trafik X கணக்கின் மூலம் Sedenak லிருந்து சிம்பாங் ரெங்கம் வரை KM47.6 இல் விபத்து நிகழ்ந்ததாகவும், போக்குவரத்து மெதுவாக இருந்ததாகவும்  ஆனால் பாதைகள் எதுவும் தடுக்கப் படவில்லை என்றும் கூறியது.

“ஷா ஆலம் முதல் சீஃபீல்ட் வரை எலிட் கிமீ 1.3 தெற்கே  ஒரு கார் பழுதடைந்தது, இதனால் இடது பாதை தடைப்பட்டது, ஆனால் போக்குவரத்து  கட்டுப்பாட்டில் உள்ளது” என்று அது கூறியது.
– பெர்னாமா


Pengarang :