ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

முதலாம் வகுப்பின் 447,982 மாணவர்களுக்கும் பள்ளி உதவித்தொகை !

ஜாசின், மார்ச் 11 – இந்த வாரம் முதல் நாடு முழுவதும் மொத்தம் RM67 மில்லியனுக்கும் அதிகமான ஒதுக்கீட்டை உள்ளடக்கிய பள்ளி உதவித்தொகை 8,903 பள்ளிகளைச் சேர்ந்த 447,982 ஆண்டு ஒன்று மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்தத் தொகையானது 2024 பட்ஜெட்டில் குறிப்பாகப் பள்ளி உதவி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட RM788.13 மில்லியனில் மறு பகுதியாகும் என கல்வி இயக்குநர் ஜெனரல் அஸ்மான் அட்னான் கூறினார்.

“இதற்கு ஒன்றாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் குழந்தைகளின் தரவு ஏற்கனவே பள்ளியில் உள்ளது,” என்று அவர் இன்று மெர்லிமாவ் துவா தேசியப்பள்ளி அமர்வின் முதல் நாள் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

மேலும், அரசாங்கம் 2024 பட்ஜெட்டின் கீழ் RM788.13 மில்லியனை குறிப்பாக இத்திட்டத்திற்காக ஒதுக்குவதாக கல்வி அமைச்சினால் முன்னர் அறிவிக்கப்பட்டது, இது 5.25 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயனளிக்கும்.

இதற்கிடையில், முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்காகத் தனியார் இடைநிலைப் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளி சிற்றுண்டிச்சாலை களும் ரம்ஜான் மாதம் முழுவதும் வழக்கம் போல் செயல்படும் என்று அஸ்மான் கூறினார்.


Pengarang :