SELANGOR

பதவிப் பிரமாணம் முடிந்த பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 26:

14-வது சிலாங்கூர் மாநில சட்டசபையின் முதல் கூட்டம் பதவிப்பிரமாணம் முடிந்த பிறகு சட்டசபை ஒத்திவைக்கப்பட்து. இந்த கோரிக்கையை மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி முன்மொழிய, பண்டார் பாரு சட்ட மன்ற உறுப்பினரும் மாநில முதலீடு, தொழில்துறை, வணிகம், சிறு மற்றும் நடுத்தர தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் தேங் சாங் கிம் வழி மொழிந்தார்.

அமிரூடின் தனது உரையில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட செகிஞ்சான் சட்ட மன்ற உறுப்பினர் எங் சுவி லிம் மற்றும் துணை சபாநாயகராக பதவி ஏற்ற பாயா ஜெராஸ் சட்ட மன்ற உறுப்பினர் முகமட் கைரூடின் ஓத்மான் ஆகிய இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


Pengarang :