கோலா லம்பூர், ஜூலை 9:
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி முதலமைச்சர்கள் மற்றும் மந்திரி பெசார்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புக்கிட் பெட்டாலிங் அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். மலாய் அரசர்கள் மன்றக் கூட்டத்திற்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெற்றது.
அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்தில் மாலை 2.13 மணிக்கு அமிரூடின் வந்து இறங்கினார். மேலும் கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்கள் மற்றும் சரவாக், மலாக்கா மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.