கோல குபு பாரு, ஜூன் 8- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் இன்று கோல குபு பாரு மற்றும் உலு பெர்ணம் தொகுதிகளில் நடைபெற்றுது.
கோல குபு பாரு நகரிலுள்ள டேவான் மெர்டேக்காவிலும் உலு பெர்ணம், சமூக மண்டபத்திலும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை இந்த பரிசோதனை இயக்கம் நடைபெற்றது.
இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள, அகப்பக்கம் வாயிலாக செலங்கா செயலியில் முன்பதிவு செய்து கொள்ள பொது மக்கள் மேட்டு கொள்ளப்பட்டனர்.
கோவிட்-19 தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கான பதிவு நடவடிக்கையும் இந்த பரிசோதனை இயக்கத்தின் போது மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத் தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 56 தொகுதிகளிலும் இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் நடத்தப்படுகிறது.