ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBT

பி.கே.பி.டி. பகுதியில் 10 சேமநிதி வாரிய அலுவலங்கள் தற்காலிகமாக மூடப்படும்

கோலாலம்பூர், ஜூலை 5- ஊழியர் சேமநிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) சில கிளைகள் மற்றும் வாடிக்கையாளர் முகப்பிடங்கள் இன்று திங்கள்கிழமை தொடங்கி தற்காலிமாக மூடப்படும்

சிலாங்கூர் மாநிலத்தில் ரவாங், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, பூச்சோங், கிள்ளான், காஜாங் மற்றும் கோம்பாக் ஆகிய இடங்களிலும் பகாங்கில் குவாந்தான், ஜெராண்டூட், பெக்கான் ஆகிய நகரங்களிலும் உள்ள அலுவலகங்கள் மூடப்படுகின்றன. 

அரசாங்கம் அறிவித்துள்ள கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் அமலாக்கம் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக இ.பி.எஃப். அறிக்கை ஒன்றில் கூறியது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த அலுவலங்கள் மூடப்பட்டிருக்கும். இணையம் வாயிலாக செய்யப்பட்ட வருகைக்கான முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது என்று அது தெரிவித்த து.

இந்த அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் போது  50,55 மற்றும் 60 வயதுடையவர்கள், மாற்றுத் திறனாளிகள், இறந்தவர்கள் சம்பந்த ப்பட்ட பண மீட்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Pengarang :