கோலாலம்பூர் ஜன 24 ;- கடந்த வார இறுதியில், ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு உள்துறை அமைச்சர் மற்றும் போலீசாருக்கு டத்தோ ஶ்ரீ அன்வார் மீண்டும் அழைப்பு விடுக்க விரும்புகிறேன் என்றார்..
எதிர்ப்புகளை தெரிவிப்பதும் அமைதியான போராட்டங்களை நடத்துவதும் மத்திய அரசமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு வழங்கப் பட்டுள்ள உரிமை.
நாட்டில் நிலவும் ஊழலின் அறிகுறிகளை நிவர்த்தி செய்வதில் இந்த நடவடிக்கை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
எனவே, அவர்கள் மீதான அனைத்து விசாரணைகளும், மிரட்டல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.