ஷா ஆலம், மார்ச் 18: அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் ஒளி உமிழும் (எல்இடி) தெரு விளக்குகளின் விநியோகத்தை அதிகரிக்கச் சிலாங்கூர் அரசாங்கம் RM36 லட்சம் நிதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வசதி ஒவ்வொரு சட்டமன்ற பிரதிநிதிக்கும் வழங்கப்படும், என்றும், அவர்கள் நிறுவல் தேவைப்படும் பகுதிகளைக் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் ஆட்சிக்குழு உறுப்பினர் இஸாம் ஹஷிம் கூறினார்.
“ஒரு யூனிட் RM8,000 முதல் RM10,000 வரையிலான விலையில் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சமீபத்திய வடிவமைக்கப்பட்ட தெரு விளக்குகளின் 10 யூனிட்களை வழங்க நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
“இருப்பினும், இது இறுதி டெண்டரைப் பொறுத்தது, ஆனால் நாங்கள் RM36 லட்சம் தொகையை நிர்ணயித்துள்ளோம். எனவே, அவர்கள் விரும்பும் எந்தச் சாலையையும் விளக்குகளால் ஒளிரச் செய்ய முடியும், ”என்று அவர் கூறினார்.
இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜின் மாட்சிமை சுல்தான் ஆணையின் நிறைவு அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, நேற்று தொடங்கிய விவாத அமர்வில் மொத்தம் 23 மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர், போர்ட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் ஜமான் ஹுரி இந்த விஷயத்தில் கேள்விகளை எழுப்பினார்.