கோத்தா டமன்சாரா, மே 10:
குறைபாடுகள் கொண்ட குழந்தைகள் (ஓகெயு) இப்போது பெடுலி சேஹாட் சுகாதார அட்டை சேவையை பயன்படுத்தலாம், அதில் மன இருக்கத்தினால் (ஓதிஸ்மா) பாதிக்கப்பட்ட பிள்ளைகளும் அடங்கும்.
மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி தெரிவிக்கையில் செல்கேட் நிறுவனத்தை பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை கேட்டு இருக்கிறேன், என்றார்.
இந்த புதிய பிரிவினர் பெடுலி சேஹாட் சுகாதார அட்டையின் மூலம் ரிம 200 பெறுமானமுள்ள சேவையை பயன்படுத்தலாம்.
டாரோயா மேலும் கூறுகையில், இத்திட்டம் இச்சிறுவர்களுக்காக பரிவு மிக்க அரசாங்கம் நல்வாழ்வு திட்டங்களுக்கு உதவி செய்யும்.
“பெடுலி சேஹாட் சுகாதார அட்டை பி40 அல்லது ரிம 3000 கீழ் வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவும், அதில் 68,579 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவித்தார்.