PBTSELANGOR

திறன்மிக்க நகர விருது, எம்டிகெஎல் சேவை தரத்தை உயர்த்த உறுதி பூண்டது

பந்திங், ஜூன் 30:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) தொடர்ந்து அதன் நிர்வாகத்தில் சிறந்த முறையில் அடைவை எட்டி 2016-இன் திறன் மிக்க நகர் விருதை தட்டிச் சென்றது. எம்டிகெஎல்-இன் தலைவர் முகமட் ஜைன் ஹமீத் கூறுகையில், இந்த விருது மன்றத்திற்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் ஆகும். இதன் மூலம் தனது பணியாளர்கள் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கி வர தூண்டுகோலாக அமையும் என்று கூறினார்.

இதனிடையே, இந்த வெற்றியின் மூலம் எம்டிகெஎல் நகராண்மை கழக அந்தஸ்தை பெற தயாராக இருப்பதாக உறுதியாகச் சொல்ல முடியும் என்று கூறினார். தனது பணியாளர்களின் அயராத உழைப்பு மற்றும் சேவை திறன் மேம்பாடு ஆகியவை கொண்டு கண்டிப்பாக நகராண்மை கழக இலக்கை அடைய முடியும் என்று விவரித்தார்.

எம்டிகெஎல் மலேசிய திறன் மிக்க திட்டமிடல் கொண்ட நகர் என்ற விருதை நகர் நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சிடம் இருந்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

#கேஜிஎஸ்

=EZY=


Pengarang :