NATIONAL

ஜூலை 16 தொடங்கி 20 நாட்களுக்கு மக்களவை கூட்டத் தொடர்

ஷா ஆலம், ஜூன் 7:

14-வது மக்களவையின் முதல் தவணைக்கான முதல் கூட்டம் எதிர் வரும் ஜூலை 16 தொடங்கி 20 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். மகாதீர், மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V அவர்களை சந்தித்து மக்களவை கூட்டத் தொடர் நடத்துவதற்கு அனுமதி பெற இருப்பதாக தெரிவித்தார்.

”  எதிர் வரும் ஜூலை 16-இல் மக்களவை மற்றும் செனட் சபையின்  சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறும். இதையடுத்து புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்,” என்று நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் பேசினார்.

ஜூலை 17-இல்  மாமன்னர் மக்களவை கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றுவார் என்றும் கூறினார்.


Pengarang :