NATIONAL

நவம்பர் வரை வான் அஸிஸா கெஅடிலான் கட்சியின் தலைவராக நீடிப்பார் !!!

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 9:

கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவ மாற்றம் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயிலிடம் இருந்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு சுமூகமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகையில், நவம்பரில் நடக்க இருக்கும் கெஅடிலான் கட்சியின் மாநாடு நடைபெறும் வரை டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தலைவராக நீடிப்பார் என்று விவரித்தார்.

”  நவம்பர் மாதம் நடக்கும் கெஅடிலான் கட்சியின் மாநாடு வரை கட்சியின் தலைவர் பணிகளை தொடர்ந்து அஸிஸா செய்து வருவார்,” என்று கெஅடிலான் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அன்வார் பேசினார்.


Pengarang :