莎阿南市政厅
PBTSELANGOR

வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடாதீர்! எம்பிஎஸ் ஏ அறிவுறுத்து

ஷா ஆலம், மார்ச் 23-

நடமாட்ட கட்டுபாடு காலத்தில் பொது மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) கேட்டுக் கொள்கிறது.
இங்குள்ள செக்ஸன் 9, விளையாட்டு பூங்கா பகுதியில் பொழுது போக்கு நடவடிக்கையிருந்ததை எம்பிஎஸ்ஏ அமலாக்க அதிகாரிகள் கண்ணுற்றதை இந்த நினைவுறுத்தலை இம்மன்றம் வெளியிட்டுள்ளது என்று அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் ஷாஹ்ரின் அகமது கூறினார்.

சம்பந்தப்பட்ட நபரிடம் அதிகாரிகள் அறுவுரை கூறிய பின்னர் அங்கிருந்து அவர் அகன்றார். ஆயினும், அமலாக்கத் தரப்பினரின் ரோந்து நடவடிக்கை காரணமாக அப்பகுதிகளில் மக்கள் ஒன்று கூடும் நடவடிக்கைகள் குறைந்திருப்பதோடு வணிகர்களும் தங்கள் வணிக நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளனர் என்றார் அவர்.

பொது மக்களுக்கு கோவிட்-19 குறித்த தகவல்களைத் தெரிவிக்க ஏதுவாக விஸ்மா எம்பிஎஸ்ஏ முதலாவது மாடியில் கோவிட்-19 நடவடிக்கை அறை ஒன்று ஒவ்வொரு நாளும் காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி செயல்படுவதாக அவர் சொன்னார்.


Pengarang :