கோலா லம்பூர், ஜூலை 22:
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக், 2011-ஆம் ஆண்டு தொடங்கி 2017-ஆம் ஆண்டு வரைக்குமான உள்நாட்டு வருமான வரி வாரியம், (எல்எச்டிஎன்) கூடுதல் வரியை, செலுத்த வேண்டும். மொத்த வரி எண்ணிக்கையுடன் கூடுதல் 10 விழுக்காடு அபராத தொகையையும் சேர்த்து நஜிப் 1.69 பில்லியன் ரிங்கிட்டை செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ அஹ்மாட் பச்சே இன்று தீர்ப்பளித்தார்.
வரி செலுத்துவதற்கான நோட்டிஸ்களை, எல்.எச்.டி.என். முறையாக வழங்கியிருப்பதால், இவ்வழக்கில் எந்தவொரு சாட்சியையும் விசாரிக்காமல், இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.