ஷா ஆலம் ஜூன் 9 ;- இன்று ஜூன் 9ஆம் தேதி காலை 9,00 முதல் சபா பெர்ணம் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற தொகுதியிலும், சாபாக் சட்டமன்ற தொகுதியிலும் நாளை வியாழக்கிழமை ஜூன் 10 ஆம் தேதி அன்று காலை 9.00 முதல் சுங்கை ஆயர் தாவார் மற்றும் சிக்கின்ஜாங் சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் அனைவரும் கலந்துக்கொண்டு அவரவர் குடும்ப நலன் காக்க உதவும்படி கேட்டுக்கொண்டார் மந்திரி புசார்.
ஜூன் 9- சுங்கை பாஞ்சாங் தொகுதி – ஸ்டேடியம் சுங்கை பெசார் |
ஜூன் 9- சாபாக் தொகுதி – டேவான் துன் ராசாக் சபாக் பெர்ணம்
ஜூன் 10- சுங்கை ஆயர் தாவார் தொகுதி- டேவான் பாகான் நாக்கோத்தா ஓமார்
ஜூன் 10- சிக்கின்ஜாங் தொகுதி – டேவான் ஶ்ரீ சிக்கின்ஜாங்
மேற்படி இடங்களில் நடைபெறும் பரிசோதனைகளில் தவறாது கலந்துக் கொள்ளும்படி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்
நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதே இந்த இயக்கத்தின் தலையாய நோக்கமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நோய்த் தொற்று இருந்தும் அதற்கான அறிகுறியை கொண்டிராதவர்களை கண்டு பிடிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் அதிக அளவில் பரிசோதனை இயக்கங்களை நடத்துகிறோம் என்றார் அவர்.