ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பெர்மாத்தாங் தொகுதியில் 400 பேருக்கு தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் விநியோகம்

ஷா ஆலம், அக் 18- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பெர்மாத்தாங் தொகுதியைச் சேர்ந்த 400 பேருக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் தஞ்சோங் காராங், பெஸ்ட் ஃப்ரெஷ் மார்ட் பேரங்காடியில் 100 வெள்ளி மதிப்பிலான அத்தியாவசிய பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டமன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

பெருநாளைக் கொண்டாடுவதற்கு உண்டாகும் செலவுகளைச் சமாளிப்பதில் இந்த  ஷோம் ஷோப்பிங் திட்டம் உதவும் என்று பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டவர்கள் கூறினர்.

தீபாவளி பண்டிகையை மேலும்  மகிழ்ச்சிகரமானதாக ஆக்குவதில் மாநில அரசின் இந்த உதவித் திட்டம் துணை புரிகிறது என அவர்கள் கருதுகின்றனர் என்று ரோஸானா குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரை இலக்காக கொண்டு மாநில அரசு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

மாநிலத்திலுள்ள மூவினத்தினரும் பெருநாள் காலத்தின் போது  100 வெள்ளிக்கான பற்றுச் சீட்டுகளைப் பெறுவதற்கு இந்த ஜோம் ஷோப்பிங் திட்டம் வகை செய்கிறது.

 


Pengarang :