ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவராக நோராய்னி ரோஸ்லான் நியமனம்

ஷா ஆலம், ஜன 13- கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் புதிய தலைவராக நோராய்னி ரோஸ்லான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவியேற்பு நிகழ்வு எம்.பி.கே. ராஜா மஹாடி கூட்ட அறையில் நேற்று நடைபெற்றது.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் முன்னாள் டத்தோ பண்டாரான நோராய்னி, டத்தோ அகமது ஃபாட்ஸ்லி தாஜூடினுக்கு பதிலாக கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

தாஜூடின் கடந்த மாதம் 16 ஆம் தேதியன்று மாநில நிதி அதிகாரியாகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டாராக பொறுப்பேற்பதற்கு முன்னர்   கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத் தலைவராக கடந்த 2011 முதல் 2017 வரை பதவி வகித்தார்.

அமெரிக்காவின் வட கரோலினா பல்கழைக்கழகத்தில் வட்டார திட்டமிடல் துறையில் பட்டம் பெற்ற்றுள்ள 58 வயதான நோராய்னி, கிள்ளான் நகராண்மைக் கழகத்தில் திட்டமிடல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Pengarang :