கோலாலம்பூர், மார்ச் 22- நாடாளுமன்றத்தில் நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி -பி.சி.ஆர். சோதனையில் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரின் தனிச் செயலாளர் சுக்ரி சஹாட் நேற்று இதனை உறுதிப்படுத்தினார். சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிகளின்படி அன்வார் ஏழு நாட்களுக்கு சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக் கொள்வார் என்று அவர் சொன்னார்.
கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தவதற்கு ஏதுவாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணியாளர்களும் ஒவ்வொரு திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.ஒ.பி. விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.