ECONOMYEVENTSELANGOR

சிப்பாங்கில்  நடைபெற்ற  ஹரி ராயா  திறந்த  இல்லத்தில்  கிட்டத்தட்ட  5,000  குடியிருப்பாளர்கள்  பங்கேற்றனர்

 சிப்பாங், மே 19:  நேற்று  இரவு  பண்டார்  பாரு  சாலாக்  திங்கியில்  உள்ள  பிபிஎஸ்தி  வாக்கில்  நடைபெற்ற  சிலாங்கூர்  மாநில  ஹரி ராயா பெருநாள்  திறந்த இல்ல உபசரிப்பில்  பல்வேறு  இனங்களைச்  சேர்ந்த  சுமார்  5,000  குடியிருப்பாளர்கள்  கலந்து கொண்டனர்.

டத்தோ  மந்திரி  புசார்  டத்தோ  ஸ்ரீ  அமிருடின்  ஷாரி  மற்றும்  அவரது  மனைவி  டத்தின்  ஸ்ரீ  மஸ்தியானா  முகமட்  ஆகியோரும்  விழாவில் கலந்து சிறப்பித்தனர்.

மாநிலச்  செயலாளர்  டத்தோ  ஹரிஸ்  காசிம்;  இந்நிகழ்ச்சியில்  சிப்பாங்  மாவட்ட  அதிகாரி  அசாலி  இப்ராஹிம்  மற்றும்  ஊராட்சி மன்றங்கள் ஆட்சிக்குழு  உறுப்பினர் இங்  ஸீ  ஹான்  ஆகியோர்  கலந்து  கொண்டனர்.

சிலாங்கூர்  அரசு  நிறுவனங்களால்  நடத்தப்படும்  23  உணவுக்  கடைகளுக்கு  சென்றதோடு,  சிறுவர்களுக்கு  டூயட்  ராயா  வழங்க  அமிருடின்  இந்த  வாய்ப்பைப்  பயன்படுத்திக்  கொண்டார்.

விருந்தினர்களை  மகிழ்விப்பதற்காக  பாடகர்கள்  டத்தோ  ஹட்டன்  மற்றும்  ஃபராஹ்வாஹிதா  பாடல்களை  பாடினர்.


Pengarang :