பத்து பகாட், செப்ட் 17: நேற்று இரவு 236 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு (ஜேபிபிடி) வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் தாமான் ஸ்ரீ பஞ்சோர், கம்போங் செங்குவாங், கம்போங் பாரு ஸ்ரீ காடிங், பெக்கான் ஸ்ரீ காடிங் மற்றும் கம்போங் ஸ்ரீ தஞ்சோங் ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜேபிபிடி இன் கூற்றுப்படி, 67 குடும்பங்களைக் கொண்ட அனைத்து பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள செகோலா மெனெங்கா கெபாங்சான் ஸ்ரீ காடிங்கில் உள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தில் வைக்கப்பட்டுள்ளனர், இது கடந்த புதன்கிழமை முதல் திறக்கப்பட்டது.
கடந்த புதன்கிழமை அதிகாலை 1.30 மணி முதல் 5.30 மணி வரை பெய்த கனமழையின் காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.