ECONOMYNATIONALPENDIDIKAN

உயர் கல்விக் கூட மாணவர்களும், நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நவம்பர் 17 முதல் 24 வரை வாக்களிக்கலாம்

கோலாலம்பூர், 29 அக்: ஆசிரியர் கல்வி நிறுவனம், மெட்ரிக்குலேஷன் கல்லூரி, தொழிற்கல்லூரி மற்றும் படிவம்ஆறாம் மாணவர்கள் வீடுகளுக்குச் சென்று 15வது பொதுத் தேர்தலுக்கு (GE15) வாக்களிக்க நவம்பர் 17 முதல் 21 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மலேசியக் கல்வி அமைச்சகம் (KPM) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 15வது பொதுத் தேர்தல் தேதி நவம்பர் 19 அன்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு இணங்க இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

“இந்த விடுப்பு காலம் மாணவர்கள் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களுக்குச் செல்ல போதுமான நேரத்தை வழங்குகின்றது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 டிசம்பர் 2021 அன்று அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்ட மற்றும் அதே ஆண்டு      டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வந்த 18 வயதுக்கு மேற்பட்டோர் வாக்களிப்பை செயல்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாகவும் இந்த முடிவு இருப்பதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த காலக் கட்டத்தில் மாணவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வகுப்புகள் அல்லது செயல்பாடுகள் வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Pengarang :