ECONOMYMEDIA STATEMENT

பிப். 26 ஆம் தேதிக்குள் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவீர்- சொத்து உரிமையாளர்களுக்கு எம்.பி.எஸ்.ஏ. வேண்டுகோள்

ஷா ஆலம்,  பிப் 6- ஷா ஆலம் வட்டாரத்தில் உள்ள அனைத்து சொத்து உரிமையாளர்களும் 2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியை பிப்ரவரி 28 க்குள் அல்லது அதற்கு முன் செலுத்துமாறு நினைவூட்டப்படுகின்றனர்.

இந்த மதிப்பீட்டு வரியைச் செலுத்துவதற்கு இணையம் உள்ளிட்ட பல்வேறு வழிகளை மாநகர் மன்றம் ஏற்படுத்தியுள்ளதாக அதன் வர்த்தக மற்றும் பொது உறவு பிரிவுத் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

வீடுகளில் குப்பைகளை அகற்றவும்  சாலைகள், தெரு விளக்குகள், வடிகால்கள் போன்ற பொது உள்கட்டமைப்பை சுத்தம் செய்து பராமரிக்கவும் மேலும் பொதுப் பூங்காக்களை உருவாக்கவும் இந்த வரித் தொகை உதவுகிறது என்று அவர் சொன்னார்.

மாநகரை திறனுடன் நிர்வகிக்கவும் அதன் மூலம் மக்களுக்கு சௌகர்யமான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்தவும் சொத்து உரிமையாளர்கள் வழங்கும் இந்த வரி பெரிதும் துணை புரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சொத்து உரிமையாளர்கள்   www.mymbsa.gov.my , www.pbtpay.kpkt.gov.my , www.maybank2u.com.my , www.rhbgroup.com , www.bankislam.com.my,. www. .cimbclicks.com.my , www.i-muamalat.com.my , www.pbebank.com மற்றும் www.cimb-bizchannel.com.my. ஆகிய இணையத் தளங்கள் வாயிலாக கட்டணத்தைச் செலுத்தலாம்.

மேலும் JomPAY மூலமாகவும் கட்டணச் சேவை வழங்கப்படுகிறது. இதுதவிர, பணம் செலுத்துபவர் பில்லர் குறியீடு: 7567, Ref-1 இல் உள்ள புதிய கணக்கு எண் மற்றும் Ref-2 இல் உள்ள தொலைபேசி எண்ணை உள்ளிட்டு, பின்னர் கட்டணத் தொகையை செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00  மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும் எம்பிஎஸ்ஏ டிரைவ்-ட்ரூ முகப்பிடத்திலும் மதிப்பீட்டு வரியைச் செலுத்தலாம் என்று அவர் கூறினார்.

இதன் தொடர்பான  மேல் விபரங்களுக்கு  மாநகர் மன்றத்தின் வருவாய் மேலாண்மைப் பிரிவு  அல்லது மாநகர் மன்றத்தின் நிதித்துறையை 03-5510 5133  இணைப்பு 1295, 1522, 1531 , 1656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :