ஷா ஆலம் மார்ச் 31 – சிலாங்கூர் அரசு ஊழியர்கள் வரவிருக்கும் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகைக் காலத்திற்கான சிறப்பு நிதி உதவியை (BKK) பெறுவார்கள்.
கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி சிறப்பு ஊக்கத்தொகை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“தற்போது மாநில செயலக கட்டிடத்தில் பணியாற்றும் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,000 வழங்கப்படும் என்றார்.