ECONOMYPBT

சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள்  போட்டியின் அரையிறுதி சுற்று ஞாயிறன்று கிள்ளானில் நடைபெறும்

கிள்ளான், மே 4- சிலாங்கூர் மாநில மந்திரி  புசாரின் சமூக நலத் தொடர்பு சிறப்பு அதிகாரி, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ்.ஜி. அவர்களின் தலைமையில் சிலாங்கூர் சிறுவர் நட்சத்திரங்கள் 2023 பாடல் திறன் போட்டியின் அரையிறுதி தகுதிச்சுற்று போட்டி எதிர்வரும் 07.05.2023 அன்று கிள்ளான் ஈ லைப்ரி மண்டபத்தில் மாலை 3.00 மணி தொடங்கி நடைபெறவுள்ளது. 9 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட சிலாங்கூர் மாநில இந்திய மாணவர்களுக்காக நடைபெறும்.

இப்போட்டியின் வெற்றியாளர்களுக்குப் ரொக்கப் பரிசும் சான்றிதழும் சுழற்கின்னமும் வழங்கப்படும். 30.04.2023ல் நடைபெற்ற முதலாம் சுற்று தகுதிப்போட்டியில் ஏறக்குறைய நூற்றிருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி போட்டியில் பங்கேற்றனர்.

அவர்களில் இருபத்தியொரு மாணவர்கள் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற வேளையில் இரண்டு நம்பிக்கை நட்சத்திர மாணவர்களும் சிறப்பு தேர்வு பெற்றனர். மாண்புமிகு குணராஜ் அவர்களின் சீரிய முயற்சியில் நடைபெறும் இப்பாடல் திறன் போட்டி சிலாங்கூர் மாநில இந்தியர்களின் பரவலான ஆதரவைப் பெறறுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநிலத் தமிழ் கலைஞர் இயக்கம் மாண்புமிகு குணராஜ் அவர்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.


Pengarang :