ஷா ஆலம், ஆக 21- டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இரண்டாவது தவணைக்கு சிலாங்கூர் மந்திரி பெசாராக இன்று பதவியேற்றார்.
கிள்ளான் அரச நகரிலுள்ள இஸ்தானா ஆலம் ஷாவில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்
இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் முன்னிலையில் இந்த பதவியேற்புச் சடங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமிருடின் மந்திரி பெசாராக பதவி உறுதி மொழியும் இரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டதோடு பதவி நியமனக் கடிதத்தையும் பெற்றுக் கொண்டார்.