கோலாலம்பூர், பிப் 1- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சென்று கண்டார்.
நேற்று 17 வது மாமன்னராகப் பதவி உறுதி எடுத்து, பதவிப் பிரமாணத்தை வாசித்து கையொப்பமிட்ட பிறகு முதல் கடமையாக இச்சந்திப்பு விளங்குகிறது என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டது.
சுல்தான் இப்ராஹிம் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிற்குப் பதிலாக துங்கு இப்ராஹிம் நாட்டின 17வது மாமன்னராகப் பதவியேற்றுள்ளார்.