PBTSELANGOR

பெட்டாலிங் ஜெயாவின் 23 அதிகாரப்பூர்வ திடக்கழிவு நிர்வாக குத்தகையாளர்கள்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28:

பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்தின் கீழ் அதிகாரப்பூர்வ 23 திடக்கழிவு அகற்றும் பணியில் ஈடுபட இருக்கும் குத்தகையாளர்களை நியமனம் செய்துள்ளது என்று பெட்டாலிங் ஜெயா மேயர் டத்தோ முகமட் அஸிஸி முகமட் ஜைன் கூறினார்.

”   இந்த முயற்சி சட்ட விரோதமாக குப்பைகளை வீசும் நடவடிக்கைகளை தடுக்க முடியும். அது மட்டுமில்லாமல் அனுமதி இல்லாத சில நிறுவனங்களும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதையும் நிறுத்த முடியும். தொடர்ந்து வீடமைப்பு பகுதியில் அகற்றும் குப்பைகள், மொத்த குப்பைகளை அகற்றுவது மற்றும் திட்டமிட்டு அகற்றப்படும் குப்பைகள் அனைத்தும் திறன் மிக்க செயல்பட வழி வகுக்கும்,” என்று எம்பிபிஜே தலைமையகத்தில் நடைபெற்ற  23 அதிகாரப்பூர்வ திடக்கழிவு அகற்றும் நிறுவனங்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில்  தெரிவித்தார்.

 

MBPJ (3)

 

 

 

 

 

அஸிஸி முகமட் ஜைன் மேலும் கூறுகையில் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் பசுமையான மற்றும் சுத்தமான சுற்றுச்சூழல் கொண்ட மாநகரமாக உருவெடுக்க இந்த நியமனம் உறுதி செய்கிறது என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :