ஷா ஆலம், ஜூலை 30:
சிலாங்கூர் மாநிலம் 2017-க்கான புதிய முதலீடுகளை பெறவிருக்கிறது. இதன் மூலம் மொத்த முதலீடுகள் அதிகரிக்கும் என்று இன்வெஸ்ட் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாசன் அஸாரி இட்ரிஸ் கூறினார்.
ஆனாலும், முதலீட்டு நிறுவனங்களின் பெயர்கள் உறுதி செய்த பிறகு அதிரடியாக அறிவிக்கப்படும் என்றார்.
” இது வரை மலேசிய முதலீடு மேம்பாட்டு வாரியம் (மீடா) புள்ளி விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும் சில நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் சந்திப்பை தொடர்ந்து புதிய முதலீடுகளும் கண்டிப்பாக வரும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.
மேலும் விவரிக்கையில், இந்த முதலீடுகளை பெறவிருக்கும் சிலாங்கூர் மாநிலம் தொடர்ந்து பொருளாதார நிலைத்தன்மை பெறும் வேளையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாகும் நிலை ஏற்படும் என்று கூறினார்.
#கேஜிஎஸ்