ஷா ஆலம், அக் 3- நாளை 4 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஜோம் சேஹாட் பெக்காவானிஸ் கடற்கரை துப்புரவு இயக்கம் கோவிட்-19 நோய்ப் பரவல் அதிகரிப்பு காரணமாக வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை பின்பற்றும் வகையிலும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான புர்ஹான் அமான் ஷா கூறினார். இந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டதால் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு தஞ்சோங் சிப்பாட் தொகுதி சட்டமன்ற சேவை மையம் சார்பில் தாம் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.