ஷா ஆலம், அக் 30- நாட்டில் இன்று 5,854 கோவிட்-19 சம்பவங்கள் பதிவானதாக சுகதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நேற்று இந்த எண்ணிக்கை 6,060 ஆக இருந்தத்தாக சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்ட பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 66 ஆயிரத்து 663 ஆக உயர்ந்துள்ளது.