ஷா ஆலம், நவ 26- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு உயிரூட்டுவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 11 கோடியே 46 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் சுற்றுலாத் சார்ந்த அனைத்து துறைகளின் திட்ட அமலாக்கத்திற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இத் துறையை மேம்படுத்துவதற்காக கித்தா சிலாங்கூர் திட்டத்தின் கீழ் புனர்வாழ்வு மானியம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.