ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

26.8 விழுக்காட்டு சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 4- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 26.8 விழுக்காட்டினர் அல்லது 952,411 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், நாட்டில் நேற்று வரை 1 கோடியே 48 லட்சத்து 84 ஆயிரத்து 826 பேர் அல்லது 63.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 385 பெரியவர்கள் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 32 ஆயிரத்து 115 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28 லட்சத்து  2 ஆயிரத்து 856 பேர் அல்லது 90.1 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 99 ஆயிரத்து 581 பேர் அல்லது 93.2 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 92,621 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 23,871 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 1,469 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 71,281 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 75 லட்சத்து 16 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 110 மரணச் சம்பவங்கள் மற்றும் 32467  தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாகவும்  சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா அவர் டுவீட்டர் கணக்கில்  பதிவிட்டுள்ளார்.

 

 


Pengarang :