ஷா ஆலம், மே 12: மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பெரிய அளவிலான திறந்த இல்ல உபசரிப்பு மே 15 அன்று உலு சிலாங்கூரில் உள்ள பல்நோக்கு அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகத்தில் நடைபெறும்.
பிற்பகல் 2.30 மணி முதல் நடைபெறும் இந்த மூன்று மணி நேர நிகழ்ச்சியில் டத்தோ மந்திரி புசாரால் டூயட் ராயா வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
கோவிட்-19 காரணமாக இரண்டு வருடத் திறந்த இல்லம் ரத்து செய்யப்பட்ட பிறகு டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மக்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாநிலத் திறந்த இல்ல நிகழ்வுகள் ஒன்பது மாவட்டங்களிலும் மதியம் அல்லது மாலையில் மே 21 முதல் ஒரு வாரக் காலத்திற்கு நடைபெறும்.
விழா நடைபெறும் தேதி மற்றும் இடம் பின்வருமாறு:
1. உலு சிலாங்கூர்: 15 மே 2022 (ஞாயிறு), 2.30 – 5.30 பிற்பகல்
-உலு சிலாங்கூர் மாவட்டப் பல்நோக்கு மண்டபம் & விளையாட்டு வளாகம்
2. கோம்பாக்: 16 மே 2022 (திங்கள்), இரவு 8 – 11 மணி
-தாமான் மெலாவத்தி ரமலான் சந்தை தளம்
3. உலு லங்காட்: 17 மே 2022 (செவ்வாய்), இரவு 8 – 11 மணி
பண்டார் பாரு பாங்கி சமூக வணிகத் தளம் (தெனெரா ஹோட்டலுக்கு முன்னால்)
4. சிப்பாங்: 18 மே 2022 (புதன்), 8 – 11 இரவு
BBST வாக், பண்டார் பாரு சாலாத் திங்கி, சிப்பாங்
5. கோலா லங்காட்: 19 மே 2022 (வியாழன்), இரவு 8 – 11 மணி
ஜுக்ரா ஸ்டேடியம், பந்திங்
6. கோலா சிலாங்கூர்: 20 மே 2022 (வெள்ளிக்கிழமை), மாலை 3 – 6 மணி
கோலா சிலாங்கூர் உள்விளையாட்டு அரங்கம்
7. சபா பெர்ணாம்: 20 மே 2022 (வெள்ளிக்கிழமை), இரவு 8 – 11 மணி
சுங்கை புசார் ஸ்டேடியம் மைதானம்
8. பெட்டாலிங்: 21 மே 2022 (சனிக்கிழமை), 2.30 – 5.30 பிற்பகல்
MBSJ பொது மண்டபம், பூச்சோங் இண்டா
9. கிள்ளான்: 21 மே 2022 (சனிக்கிழமை), இரவு 8 – 11 மணி
பண்டமாறன் விளையாட்டு வளாகம்
ஆகிய இடங்களில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.