கோத்தா பாரு, ஏப் 28- வெப்ப பக்கவாதம் காரணமாக பதினோறு வயது மற்றும் ஒரு வயது 7 மாதம் நிரம்பிய இரு சிறார்கள் உயிழந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுவதை கிளந்தான் மாநில சுகாதாரத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் ஜைனி ஹூசேன் பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.
வெப்பத் தாக்கம் காரணமாக 11 வயதுச் சிறுவன் பாச்சோக், சுகாதார மையத்திலும் ஒரு வயது ஏழு மாதம் நிரம்பிய பெண் குழந்தை கம்போங் கோத்தாவிலும் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.