ECONOMYMEDIA STATEMENT

மாநிலங்களுக்கான  உரிமத் தொகை கட்சிக் கணக்கில் சேர்க்கப்பட்டதா? கெஅடிலான் மறுப்பு

கோலாலம்பூர், ஏப் 13 – கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களுக்கான கோடிக்கணக்கான வெள்ளி உரிமத் தொகை   கட்சியின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை பார்ட்டி கெடிலான் ரக்யாட் (கெடிலான்) தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்சில் மறுத்துள்ளார்.

மிகவும் கேவலமான, பொய்யான மற்றும் அவதூறான பதிவுகளை பதிவேற்றிய நபர்கள் உள்ளனர். ஒவ்வொரு முறையும் பேராளர் மாநாடு நடைபெறும் போது கெஅடிலான்  அதன் கணக்குகளை தாக்கல் செய்கிறது. மேலும் இந்த கணக்குகள் சான்றளிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர்களால் தணிக்கை செய்யப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

அந்த பதிவில் கூறப்படுவதைப் போல் கெஅடிலான் கடசிக் கணக்குகளில் இவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்படவில்லை என்று அவர் இன்று முகநூல் பதிவில் கூறினார்.

குரோத நோக்கிலான  குற்றச்சாட்டை பரப்பிய நபர்களுக்கு எதிராக உடனடியாக காவல் துறை  மற்றும் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திடம் புகார் அளிக்க தாம்  உத்தரவிட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

‘ஜபத்தான் நெட்டிசன் நெகாரா (அதிகாரப்பூர்வ)’ என்ற பொது  முகநூல் குழுவில் இந்த குற்றச்சாட்டு நேற்று வெளிப்பட்டது.


Pengarang :