ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGORTOURISM

சுற்றுலாத் துறைக்கு புத்துயிரூட்ட 11 கோடியே 46 லட்சம் வெள்ளியா? எப்படி?

பெட்டாலிங் ஜெயா, டிச 4- சுற்றலாத் துறைக்கு புத்துயிரூட்டும் நோக்கில் சிலாங்கூர் அரசாங்கம் வழங்கும்  10  வெள்ளி  நிதி உதவியின் மூலம்  மாநிலத்திலுள்ள சுற்றுலா 50 சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பயனடைவர். தலா  20,000  மதிப்புள்ள மானியங்கள் விற்பனை நடவடிக்கைகள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகள் மூலம் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் திட்டங்களை மேற்கொள்ள இயலும் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

கோவிட்-19 நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் புத்துயிரூட்ட இந்த மானியம் உதவும் என மாநில அரசு நம்புகிறது என்று “சிலாங்கூரை முதலில் வலம் வருவோம்” சுற்றுலா கண்காட்சியை இன்று இங்கு  தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பின் கீழ்  மாநில சுற்றுலாத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியில்  பகுதியாக இந்த மானியம் உள்ளது.

இந்த மானியம் தவிர, சிலாங்கூர் சுற்றுலா பற்றுச்சீட்டுத் திட்டம் 2.0 , இலக்கவியல் கற்றல் பயிற்சி திட்டம் மற்றும் மாநில சுற்றுலா சங்கங்களுக்கு ஒரு முறை நிதி உதவி திட்டம் ஆகியவை அந்த ஒதுக்கீட்டின் வழி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலாத் துறை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதற்காக 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் 11 கோடியே 46 லட்சம் வெள்ளி ஒதுக்கப்படுவதாக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.


Pengarang :