கோலாலம்பூர், டிச.11- இன்று தனது 78வது பிறந்த நாளைக் கொண்டாடும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுல்தான் ஷராபுடின், தெங்கு பெர்மைசூரி சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மற்றும் அனைத்து சிலாங்கூர் அரச குடும்பத்தினரும் இறைவன் அருளால் ஆசீர்வதிக்கப்பட்டு நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் இறையாண்மையுடன் ஆட்சி செய்ய வேண்டும் என தாம் பிரார்த்தனை செய்வதாக அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நானும் நாட்டு மக்களும் எங்கள் பிளவுபடாத கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் தொடர்ந்து வழங்கி வருவோம் என உறுதியளிக்கிறோம் என்று அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.