ஷா ஆலம், டிச 31- ஷா ஆலம் ஸ்டேடியம் வளாகத்திலுள்ள உள்ள டத்தாரான் கார்னிவலில் இன்று பிற்பகல் 1.00 மணி தொடங்கி முகப்பிடச் சேவையை ஷா ஆலம் மாநகர் மன்றம் நடத்துகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “டாருல் எஹ்சான் பெர்சலாவாட் 3.0” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த ‘ஷா ஆலம் ஆன் வீல்ஸ்’ சேவை வழங்கப்படவுள்ளதாக மாநகர் மன்றம் தனது முகநூல் பதிவில் கூறியது.
மக்களுக்கு தகவல் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக நடமாடும் முகப்பிட அலுவலகத்தைத் திறக்கும் வாய்ப்பை மாநகர் மன்றம் தவறவிடவில்லை.
இந்த திட்டத்தை முன்னிட்டு பல்வேறு கண்காட்சிகள் மற்றும் சுவாரஸ்யமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள் என்று அது தெரிவித்தது.
மதிப்பீட்டு வரி செலுத்துதல், வாகன நிறுத்தக் குற்றப்பதிவை மதிப்பாய்வு செய்து செலுத்துதல், புகார் முகப்பிடம், வர்த்தக உரிமத்தின் நிலையை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்நிகழ்வில் வழங்கப்படுகிறது.
மக்கள் முகப்பிடங்களுக்கு வராமல் தங்கள் பணிகளை வார இறுதி நாட்களில் எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த நடமாடும் முகப்பிடச் சேவையை மாநகர் மன்றம் வழங்குகிறது. .