ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் சட்டமன்றக் கூட்டம் ஆகஸ்டு 23 தொடங்கி 9 நாட்கள் நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 9- மாட்சிமை தங்கிய மாமன்னர் மற்றும் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஆகியோரிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத் தொடர் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிக்கை ஒன்றில் கூறினார்.

இந்த கூட்டம் வெறும் சிறப்பு கூட்டமாக அல்லாமல் கேள்வி, பதில் மற்றும் விவாத அங்கங்களை உள்ளடக்கிய வழக்கமான அமர்வாக இருக்கும் என்று அவர் சொன்னார்.

மாநிலத்தில் ஜனநாயக நடைமுறை தொடர்ந்து கட்டிக்காக்கப்படுவதை உறுதி செய்து வரும் மாட்சிமை தங்கிய  சிலாங்கூர் சுல்தான் அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத் தொடரை வரும் ஆகஸ்டு மாதம் 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க மாட்சிமை தங்கிய சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார். இந்த சிறப்பு நிகழ்வுக்குப் பின்னர் சட்டமன்றக் கூட்டம் எட்டு நாட்களுக்கு நடைபெறும் என்று அமிருடின் சொன்னார்.

இந்த கூட்டத் தொடரை நடத்துவதற்கான அனுமதிக் கடிதம் மாட்சிமை தங்கிய பேரரசரிடமிருந்து இம்மாதம்  6ஆம் தேதி கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :