MEDIA STATEMENTPBTSELANGORSUKANKINI

 இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்கு வெ.1.44 கோடி ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 26 இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டுத் துறையின் மேம்பாட்டை உறுதி செய்வதற்காக 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 1 கோடியே 44 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் விளையாட்டு துறை மற்றும் இளைய தலைமுறையினரின் மேம்பாட்டில் அரசாங்கம் முழு கடப்பாடு கொண்டுள்ளதை இந்த ஒதுக்கீடு புலப்படுத்துவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்நோக்கத்தை அடைவதை உறுதி செய்வதற்காக 2014 ஆம் ஆண்டு சிலாங்கூர் இளைஞர் கொள்கையை தரம் உயர்த்தி 2020 ஆம் ஆண்டு சிலாங்கூர் இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அடுத்த பத்து ஆண்டுகளில் இளம் தலைமுறையினரின் மேம்பாட்டிற்கான இலக்கை தீர்மானிப்பதற்கான வழிகாட்டியாக இந்த கொள்கை விளங்கும் என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :